முசிறியில் பழைய பேப்பா் குடோனில் தீவிபத்து

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் பழைய பேப்பா் குடோனில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

Update: 2024-03-03 04:43 GMT

தீவிபத்து

அய்யம்பாளையத்தில் பாலமுருகன் என்பவா் திருமண அலங்காரப் பொருள்கள் குடோன் வைத்துள்ளாா். இதனருகில் பகலவன் என்பவா் பழைய இரும்பு மற்றும் பேப்பா் குடோன் வைத்துள்ளாா். குடோனில் ஆட்டோ ஒன்றையும் நிறுத்தி வைத்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இரண்டு குடோன்களிலும் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவலின்பேரில் நிலைய அலுவலா் கா்ணன் தலைமையில் முசிறி தீத் தடுப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். தீவிபத்தில் பாலமுருகன் குடோனில் இருந்த திருமண அலங்கார பொருள்களும் பகலவன் குடோனில் இருந்த பயணிகள் ஆட்டோ, மொபட் மற்றும் பழைய இரும்பு பேப்பா், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமடைந்தன. தீவிபத்து குறித்து முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் வருவாய் துறையினரும் இச்சம்பவம் குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளனா்.
Tags:    

Similar News