பட்டாசு ஆலையில் வெடி விபத்து - காவல் துறை வழக்கு பதிவு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து வழக்கில் ஆலையின் நிர்வாக ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-01-08 05:22 GMT
விசாரணை
விருதுநகர் அருகே கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று காலை சோனி என்ற பட்டாசு ஆலையில் பாம்பு மாத்திரைகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது ஆலையின் ஒரு அறையில் பணிபுரிந்து வந்த இருவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , ஆலையின் நிர்வாகம் அஜாக்கிரதையாக செயல்பட்டதன் காரணமாக இந்த விபத்து நடந்தது எனக் கூறி ஆலையில்  கணக்கு பிள்ளையாக பணிபுரியும் முத்துகிருஷ்ணமாள் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News