திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலைகள் வெடி விபத்து

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் 19 அறைகள் தர மட்டம் ஆனது.

Update: 2024-03-23 15:48 GMT
திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் வெட்டி விபத்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகா மைப்பாறை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... வெடி விபத்து நடைபெற்ற இடத்திலே சுற்றிலும் மக்காச்சோள தோட்டம் என்பதால் சுற்றி 3 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

தொடர்ந்து அங்கு பலத்த தீ எரிந்து விட்டதால் தீயை அணைத்து பின் உள்ளே சென்றால் அங்குள்ள நிலை தெரிய‌ வரும். அப்போது அங்குள்ள பட்டாசுகளும் வெடித்து சிதறுகின்றன.... சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் தீயனைப்பு துறை மற்றும் கழுகுமலை தீயணைப்பு துறை வாகனங்கள் வந்து தீயை அணிக்கும் பணிகள் தற்போது ஈடுபட உள்ளன.

மேலும் சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,கோட்டாட்சியர் கவிதா சங்கரன்கோவில் காவல் துறை கண்காணிப்பாளர் சுதீர், உள்ளிட்டோர் வருகை தந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

Similar News