வெள்ளையாண்டிபட்டியில் மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளையாண்டிபட்டியில் நடைப்பெற்றது மீன்பிடி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-03 07:40 GMT

மீன்பிடி திருவிழா 

பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சி வெள்ளையாண்டிபட்டி காட்டுக்கண்மாயில் கோடைகாலத்தை முன்னிட்டும், ஊர்மக்கள் ஒற்றுமைக்காகவும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடந்தது.

வெள்ளையாண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்மாயில் இறங்கி மீன்பிடி உபகரணங்களான பரி, கச்சா, வலை, துாரி ஆகிய வற்றை கொண்டு மீன்பிடித்தனர். வலையில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை,அயிரை, விரால் உள்ளிட்டவை சிக்கின. அவற்றை மகிழ்ச்சியுடன் கிராமமக்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News