நத்தம் அருகே மீன் பிடி திருவிழா

சாணார்பட்டி அருகேயுள்ள கிழவன்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் 1 முதல் 2 கிலோ வரை மட்டுமே மீன்கள் கிடைத்து.

Update: 2024-06-24 02:44 GMT

மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள எல்லைப்பட்டி கிழவன்குளம் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் கிழவன் குளம். இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, மேட்டுகடை, கொசவபட்டி மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டு ஊத்தா மீன்பிடி கூடையை கொண்டு மீன்களை பிடித்தனர்.மீன் பிடி பிரியர்கள் சிலருக்கு மட்டும் 1 கிலோ முதல் 2 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தது.
Tags:    

Similar News