சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-07-04 18:06 GMT

பாலியல் தொல்லை 

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (68).பெங்களூரு கேஆர் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 15ந் தேதி பெங்களூரு சென்னை ரயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்தார். அதேப்பெட்டியில் 9 வயது சிறுமி தாயுடன் பயணித்தாள்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்த சிறிதுநேரத்தில் சாமுவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்தாள். அவர் உடனடியாக ரயில்வே போலீஸ் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார், காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து சாமுவேலை கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.போலீசார், சாமுவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நடந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமுவேலுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.பின்னர்,சாமுவேலை போலீசார் வேலூர் மத்திய ஜெயிலுக்கு வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News