பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2024-07-01 11:28 GMT

விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தொகுதியில் உள்ள 276 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக் கும் வகையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதுடன், அந்தந்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள விக்கிரவாண்டி மற்றும் ஆசூர், ஒரத்தூர் பகுதிகளில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்ளிட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் துப்பாக்கிகளுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Tags:    

Similar News