ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி: 30-ந் தேதி வரை நீட்டிப்பு

ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி 30-ந் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-26 08:52 GMT

மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைவதாக இருந்தது. இருப்பினும் மலர் கண்காட்சியை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் மலர் கண்காட்சியை மட்டும் வருகிற 30-ந் தேதி வரை கூடுதலாக 4 நாட்கள் நீட்டித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பஸ் வசதியையும் வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து மேலாண்மை இயக்குனர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News