பறக்கும் படை சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-08 07:01 GMT
பணம் ஒப்படைப்பு
உளுந்துார்பேட்டை அருகே ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உளுந்துார்பேட்டை தேர்தல் பறக்கும் படை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் சேலம் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், 60; என்பவர் ஒரு லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. பணத்திற்கு முறையான ஆவணம் ஏதும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.