கால்பந்து போட்டி

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது

Update: 2024-06-02 10:47 GMT

கால்பந்து போட்டி 

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அசுரா அறக்கட்டளை சார்பில் கடந்த இரண்டு நாட்களாக கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதியிலிருந்து இருந்து 30க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்த கால்பந்து போட்டியில் அசுரா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது .

சிவந்திபுரம் அணி இரண்டாம் இடத்தையும், மாரடோனா அணி மூன்றாம் இடத்தையும், தென்காசி அணி நான்காம் இடத்தையும் பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News