திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-05 09:10 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள்

திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியை சோதனை செய்தபோது அவர் 7,100 சவுதி ரியால்கள் 2,750 யூரோக்கள், 16,100 அமெரிக்க டாலர்கள், 500 பவுண்ட்கள் ஆகிய வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தார்.

Tags:    

Similar News