தலையணையில் இரண்டாவது நாளாக தடை விதித்த வனத்துறை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தலையணை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-27 03:46 GMT
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தலையணை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்தும் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு தலையணையில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் (ஜூன் 27) இரண்டாவது நாளாக தடை தொடர்வதாக வனத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.