விண்ணிற்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ முயற்சி – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் விண்ணிற்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ முயற்சிப்பதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-04 01:26 GMT
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டம் கெகன்யா என்ற திட்டம் விண்ணிற்கு மனிதனை அனுப்பி பத்திரமாக திருப்பி பூமிக்கு அழைத்து வரும் இந்த திட்டத்தில் பல்வேறு திட்ட சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் பயணம் செய்யும் மனிதர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நாசாவும் இஸ்ரோவும் சேர்ந்து NISAR என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதே போன்று வரும் 2035 க்குள் விண்வெளியில் இஸ்ரோ சார்பில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான திட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வரும் 2040-ல் இஸ்ரோ சார்பில் இந்திய மனிதன் ஒருவரை நிலவில் இறக்கவும் இஸ்ரோவிடம் திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News