பறவை காய்ச்சல் உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் - சி. விஜயபாஸ்கர் பேட்டி

விராலிமலையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேட்டி.

Update: 2024-04-26 09:23 GMT

சி. விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் விராலிமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் சுகாதாரத்துறை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், வெயிலால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் பறவை காய்ச்சல் உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மாநில எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.
Tags:    

Similar News