திமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் அறிக்கை

அரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முன்னாள் அமைச்சர் அறிக்கை

Update: 2024-06-19 11:59 GMT

பி.பழனியப்பன்

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது, தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரூர் சட்டசபை தொகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி நாளை (வியாழக்கிழமை) அரூர் கிழக்கு ஒன்றியம் மத்தியம்பட்டி, வேட கட்டமடுவு, தீர்த்தமலை, வீரப்பநாய்க் கன்பட்டி, பொன்னேரி, எல்லபுடையம் பட்டி, வேப்பம்பட்டி, பையர்நாய்க்கன் பட்டி, பெரியப்பட்டி, நரிப்பள்ளி,கோட்டப்பட்டி, சிட்லிங் ஆகிய ஊராட்சிகளில் பி. பழனியப்பன் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். இதேபோன்று நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அரூர் மேற்குஒன்றியம் சார்ந்த கீரைப்பட்டி, அச்சல்வாடி,பே.தாதம் பட்டி, கொக்கராப்பட்டி, பறையப்பட்டிபுதூர், ஜம்மன அள்ளி, எச்.கோபிநாதம்பட்டி, சின்னாங்குப்பம், கொளகம் பட்டி, எச்.தொட்டம்பட்டி, கோபாலபுரம் ஆகிய ஊராட்சி களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வருகைதர உள்ளார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News