அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாஜி ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரிந்த வாகனம் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-17 03:10 GMT

பைல் படம் 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோளையானூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இவர் நேற்று ஜூன் 16 காலை பெரியாம்பட்டி காமராஜர் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து, தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பூலாப்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை உயிரிழந்தார் இதுகுறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மீது விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News