மூன்று பைக்குகள் மோதி விபத்து முன்னாள் ஆசிரியர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம் 

மூன்று பைக்குகள் மோதி விபத்தில் முன்னாள் ஆசிரியர் உயிரிழப்பு. மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Update: 2024-02-17 11:14 GMT
பூதப்பாண்டி அருகே பைக் விபத்து
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் காந்தி என்ற ஆறுமுகம் பிள்ளை (62).  ஓய்வு பெற்ற ஆசிரியர். துவரங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டனி மைக்கேல் ராஜ் (17) மற்றும் வசந்த் (16), இறச்சகுளம் பகுதி சேர்ந்தவர்கள் ஜான்சன் (56) மற்றும் நிஷாந்த் (26)       இதில் ஆறுமுகம் பிள்ளை தனியாக ஒரு பைக்கிலும், ஆண்டனி மைக்கேல் ராஜ், வசந்த் ஆகியோர் மற்றொரு பைக்கிலும், ஜான்சன், நிஷாந்த் ஆகியோர் இன்னொரு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பூதப்பாண்டி அடுத்த  அரசங்குடி பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரே மூன்று பைகளும் ஒரு சேர வந்து கொண்டிருந்தன. திடீரென்று அந்த மூன்று பைக்குகளும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் பிள்ளை சம்பவத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.  மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் சென்று ஆறுமுகம் பிள்ளையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News