விளையாட்டரங்க பல்நோக்கு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

சென்னை ஆர்.ஆர்.காலனியில் கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டு அரங்கத்தை உள்ளடக்கிய பல்நோக்குக் கட்டடத்திற்கான பணியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

Update: 2024-03-06 10:11 GMT

அடிக்கல் நாட்டு விழா 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, ஜாபர்கான்பேட்டை, ஆர்.ஆர்.காலனி, 3வது தெருவில் மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.37 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டு அரங்கத்தை உள்ளடக்கிய பல்நோக்குக் கட்டடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஸ்ரீதரன், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News