வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல்
கடலூர் மாவட்டம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
Update: 2024-02-17 11:31 GMT
கடலூர் மாவட்டம்குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் ரூபாய் 99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். உடன் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.