கோவில் அருகே சூதாடிய நான்கு பேர் கைது.

கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ. 400 பறிமுதல்.

Update: 2023-11-26 10:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொரவப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 25ஆம் தேதி மதியம் 3 மணியளவில் கொரவபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள அரசரதம் கோவில் அருகே உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கொரவபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி, சண்முகம் ,தங்கராஜ், ஏமூரை சேர்ந்த ரவி சுந்தரம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும்,இவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 400ஐயும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Tags:    

Similar News