பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது !

பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது. இறந்த நிலையில் இரண்டு சேவல்கள் மீட்பு.

Update: 2024-03-16 08:53 GMT

 காவல்துறை

பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது. இறந்த நிலையில் இரண்டு சேவல்கள் மீட்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, கீழ்பாகம் கிராமத்தில், பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 14ஆம் தேதி இரவு 8:30- மணி அளவில் முடக்கூர், கீழ்பாகம் கிராமத்தில் உள்ள வடுகப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விருப்பாச்சியை சேர்ந்த திவாகர், அரவக்குறிச்சி தாலுகா, ராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார், மொடக்கூர் வடுகப்பட்டியைச் சேர்ந்த ராஜ் ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சேவல் சண்டையில் ஈடுபடுத்திய இரண்டு சேவல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரூபாய் 400- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Tags:    

Similar News