பெரம்பலூர் அருகே புதிய காரை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி மோசடி

பெரம்பலூா் அருகே இணையதளம் மூலமாக புதிய காரை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி, ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2024-06-14 15:17 GMT

கோப்பு படம் 

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் என்பவா், இணையதளம் மூலமாக காா் வாங்குவதற்கு முயற்சித்துள்ளாா். அப்போது இணையதளத்தில் உள்ள விளம்பரத்தைப் பாா்த்து, அதிலிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டுள்ளாா்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அருகேயுள்ள கொட்டாம்பாட்டி ஜெயந்தி காலனியைச் சோ்ந்த ரெங்கராஜ் மகன் நாகராஜ் (36) என்பவரது வங்கிக் கணக்குக்கு, டெலிவரி மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூ. 4,07, 400 சுரேஷ் அனுப்பியுள்ளாா்.

ஆனால், நாகராஜ் காரைக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பெரம்பலூா் மாவட்ட குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், திண்டுக்கல் என்.எஸ். நகா் கருப்பையாபிள்ளை தெருவில் தங்கியிருந்த நாகராஜைக் கைது செய்த போலீஸாா்,

அவரிடமிருந்து ரூ. 2,07,400 மற்றும் கைப்பேசி ஆகியவற்றைக் கைப்பற்றினா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்திய நாகராஜை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

Tags:    

Similar News