விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

Update: 2024-01-31 11:35 GMT
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, குருணை குளத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி, கடவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், திமுக கட்சி நிர்வாகிகள் அழகர், கனி, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, பள்ளி மாணவர்களிடைய சிறப்புரையாற்றி, பின்னர் அவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News