இலவச கண் சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Update: 2024-03-11 02:11 GMT
சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரில் அளவில் நாலுவாசன் கோட்டை கிராம உதயம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது முகாமினை லயன். சங்கரசுப்பையா தலைமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார் நிகழ்வில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஹரி தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை செய்தனர் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாட்டினை கிராம உதயம் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வின் முடிவில் கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News