செங்கோட்டை நூலகத்தில் இலவச மாதிரித் தோ்வு

செங்கோட்டை நூலகத்தில் இலவச மாதிரித் தோ்வு நூலகத்தில் நடைபெற்றது

Update: 2024-05-06 16:01 GMT
செங்கோட்டை நூலகத்தில் இலவச மாதிரித் தோ்வு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் இரண்டாவது இலவச மாதிரித் தோ்வு நடைபெற்றது. செங்கோட்டை நூலகத்தில் நூலக வாசகா் வட்டம் மற்றும் விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் குரூப் -4 தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கான இரண்டாவது மாதிரி தோ்வு நடைபெற்றது.

தென்காசி ஆகாஷ் அகாதெமின் உதவியோடு நடைபெற்ற இந்தத் தோ்வில் 80 மாணவா்கள் கலந்து கொண்டனா். வாரந் தோறும் ஞாயிறு திங்கட்கிழமை நடைபெறும் மாதிரித் தோ்வில் அனைத்து மாணவா்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நூலக வாசகா் வட்டத்தினா் தெரிவித்தனா்.

Tags:    

Similar News