பைக் கார் மோதல் நண்பர்கள் பலி!

புதுக்கோட்டையில் பைக் கார் மோதிய விபத்தில் நண்பர்கள் பலியாயினர்.

Update: 2024-05-14 07:13 GMT
புதுக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா (45). மேலத்தானி யத்தை அடுத்த தாலுகா எம்.உசிலம்பட் டியை சேர்ந்தவர் பழனியப்பன்(50). இருவரும் நண்பர்கள். கருப்பையா டிங்கரிங் ஓர்க் கடையும், பழனியப்பன் மியூசியம் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையும் நடத்தி வந்தனர். இரவு பைக்கில் திருமயம் சென்று விட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கு திரும்பினர். பூசத்துறை பிரிவு ரோடு அருகேவந்தபோது, புதுக்கோட்டையில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற கார் எதிர்பாரா தவிதமாக பைக் மீது மோதியது. இதில் பழனியப்பன் அதே இடத்தில் பலியானார். கருப்பையா படுகாயத்துடன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் அன்னவாசலை சேர்ந்த லட்சுமணன் என் பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News