காட்பாடி: கஞ்சா விற்பனை - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

வன்றதாங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-08 09:34 GMT

கைது 

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய போலீசார் காட்பாடி அடுத்த வன்றதாங்கள் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டிகாஸ்டர் சேவியர் பால் என்பவர் கஞ்சா விற்பனை செய்தபோது கையும் களவுமாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் கைதானவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News