வேலூரில் பள்ளி முன்பு குப்பைகள் எரிப்பு!

வேலூரில் பள்ளி முன்பு குப்பை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-11 04:04 GMT

வேலூரில் பள்ளி முன்பு குப்பை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வேலூர் சத்துவாச்சாரி முருகன் கோவில் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பு குப்பைகள் கொட்டுவது வழக்கமாகி வருகிறது. குப்பைகளை அப்புறப்படுத்தாமல், சிலர் அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிவதால் வரும் புகைமூட்டத்தால், பொதுமக்கள், சிறு குழந்தைகள் பாதிப்படைந்து வருகின்றனர். குப்பைகளில் தீ வைப்பதை தடுக்கவும், முறையாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News