எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

Update: 2024-06-13 05:28 GMT

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் எரிவாயு (கியாஸ்) உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடக்கும். இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News