கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க பொது பேரவைக் கூட்டம்

Update: 2023-12-17 05:30 GMT

பொது பேரவைக் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 46வது பொது பேரவைக் கூட்டம் வட்டார வளமைய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் மு.கோகிலா தலைமை தாங்கினார். முன்னாள் சங்க தலைவர் த. செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். முன்னாள் துணைத் தலைவர் சி.அ.முருகன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் கி.கவிதா அறிக்கை மற்றும் தீர்மானங்களை வாசித்தார். கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீராமுலு,ராமமூர்த்தி, திருவண்ணாமலை கூட்டுறவு சார்பதிவாளர்அலுவலக கள அலுவலர் இ.சரவணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் ர.வெங்கடேசன், அய்யாசாமி,ஜேம்ஸ்,சுகுமார், ஜெ.வெங்கடேசன், தணிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.அப்போது 248 உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையாக ரூ 23 லட்சத்து 41 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கூட்ட முடிவில் கணினி இயக்குனர் சோமநாதன் நன்றி கூறினார். -
Tags:    

Similar News