ராசிபுரத்தில் தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

துணை ஆய்வாளர்களுக்கு முறையான பணியாணை வழங்க வேண்டும் என ராசிபுரத்தில் நடந்த பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-04-29 13:03 GMT

தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாந்தி இன் ஹோட்டலில், தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருபாகரன் தலைமை வகித்து பேசினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்திற்கு ஜனநாயக முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தப்படும் வேண்டும், பள்ளிக்கல்வி துறையில் உள்ள அனைத்து பள்ளிக் கல்வி ஆய்வாளர்களுக்கும் உரிய அக்கீகாரத்தை கேட்டு பெறுவது, பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து அனைத்து பணிகளிலும் உத்வேகத்துடன் செயல்படுவது, பள்ளி துணை ஆய்வாளர்களுக்கு முறையான பணியாணை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்க பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பெரியசாமி , கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News