திமுக சார்பில் வீர வணக்க நாள் பொது கூட்டம்

ராசிபுரம் நகர திமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Update: 2024-01-30 06:40 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது . கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர் தலைமை வகித்தார். கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத். அமுதநேசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் பேசிய நாஞ்சில் சம்பத் மோடி அரசால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி வந்தால் தமிழகத்தில் உள்ள அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவே சிறந்த ஆட்சி அமைக்க மக்கள் முடிவு செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர்  மு க ஸ்டாலின் அவர்களையும் மக்கள் நினைத்துப் பார்த்து சரியான முறையில் நல்ல தலைவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.பி. ராமசுவாமி, ஜெகநாதன், துரைசாமி, ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், அணி பொறுப்பாளர்கள் முத்துவேல், கார்த்திக், கவுன்சிலர் விநாயகமூர்த்தி, ராஜேஷ் பாபு, கந்தசாமி, மணிகண்டன் மற்றும் பேரூர் செயலாளர். சுப்பிரமணி, ஜெயக்குமார், பொன். நல்லதம்பி, கண்ணன்,ராஜேஷ் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர், நகர ஒன்றிய, பேரூர், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News