அரளிக்காய் சாப்பிட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி !

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் அரளிக்காய் சாப்பிட்டு சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2024-04-27 06:16 GMT

அரளி விதை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் அரளிக்காய் சாப்பிட்டு சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதி சேர்ந்த செல்வராஜ் மகள் மேனகா (18) இவர் தீராத வயிற்று வலியால் அவதி உற்று வந்தார் இந்த நிலையில் வயிற்று வலி அதிகமாக மணமுடைந்த மேனகா வீட்டின் அருகே இருந்த அரளிக்காயை சாப்பிட்டு மயங்கி உள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News