பெண் தூக்கு மாட்டி தற்கொலை!

ஆலங்குடி அருகே பெண் தூக்கு மாட்டி தற்கொலை - போலிசார் விசாரணை

Update: 2024-07-04 06:53 GMT

தற்கொலை

ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி அறிவொளி நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி ஜெயராணி(50). இவர்களுக்கு முகேஷ், கிதேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடன் வாங்கியது தொடர்பாக குடும்பத்தில் கடந்த சில நாட்களாக தகராறு நடந்து வந்தது. இதனால் மனமுடைந்த ஜெயராணி நேற்று காலை வீட்டின் பின்புறம் உத்திரத்தில் சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News