மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

மடப்புரத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-03 09:23 GMT

மடப்புரத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், பிரான் மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது 8 வயது மகள் வர்ஷா குடும்பத்துடன் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக சிறுமி வர்ஷா கோவிலுக்கு வெளியே சென்றபோது இரும்பு மின் கம்பத்தை தொட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கோவிலுக்கு வெளியே மூன்று மின்கம்பங்கள் உள்ளது. இவை அனைத்தும் இரும்பால் ஆன மின்கம்பங்கள். திருப்புவனம் மின்வாரியமும் கோவில் நிர்வாகமும் முறையாக சிமெண்ட் மின்கம்பம் அமைக்காததால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது
Tags:    

Similar News