இரவு பள்ளி சார்பில் பெண்கள் கபடி போட்டி

குடியாத்தம் பங்கரிஷி குப்பம் கிராமத்தில் மருத்துவர் அனிதா இரவு பள்ளி சார்பில் நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் ஏரளமான வீரர்கள் பங்கேற்றனர்

Update: 2023-12-31 08:30 GMT

கபடி போட்டி

‌வேலூர் மாவட்டம் குடியாத்தம் பங்கரிஷி குப்பம் கிராமத்தில் மருத்துவர் அனிதா இரவு பள்ளி சார்பில் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி அமச்சூர் கபடி கழக துணை தலைவர் இராசி தலித் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பூஞ்சோலை சீனிவாசன் போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாவது பரிசு 15 ஆயிரம் ம மூன்றாவது பரிசு ரூபாய் 10 ஆயிரம் நான்காவது பரிசு ரூபாய் 7 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு நடுவர்களாக கோபாலன் மோகன் சுந்தர் சிவராமன் சேட்டு ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டி பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் அனிதா இரவு பள்ளி அமைப்பாளர் திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News