ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் ஆடு திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-07-04 17:57 GMT

ஆடு திருட்டு 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஆடு திருட்டு போவதாக அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா பெரிய கடம்பூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (23), சங்கர் (21) என்பதும், 2 பேரும் ஆடு திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.அதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News