தெரு நாய்களால் கடிப்பட்ட ஆடுகள் பலி

தெரு நாய்கள் கடித்ததில் எட்டுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆறுதல்

Update: 2024-02-01 10:10 GMT
திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூர் ஊராட்சி அருந்ததியர் காலனியில் வசிக்கும் ரவிக்குமார் - அன்புகொடி தம்பதியினர் வளர்த்து வரும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறி ஆடுகள் உயிரிழந்ததை அடுத்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். அவருடன் திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த், திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலு, ஊராட்சி மன்ற தலைவர் தாமரை செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News