விகேபுரம் குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

திருநெல்வேலி மாவட்டம்,விகேபுரம் பகுதியில் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2024-02-17 01:05 GMT

குண்டாஸ்

நெல்லை மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் அடிதடி,கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட சரவண அய்யப்பன் என்பவர் கைதாகி ஏற்கனவே சிறையில் உள்ளார்.இவர் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வி.கே.புரம் போலீசார் வேண்டுகோளுக்கிணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சரவண அய்யப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News