பைக் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலி!

அம்மன்புரத்தில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2024-02-16 10:34 GMT

 விவசாயி பலி!

தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் திருவள்ளுவர் மேலத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(64). இவர் அம்மன்புரம் பகுதியில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர் தினமும் வாழைத்தோட்டத்திற்கு சென்று அங்கு விவசாய பணிகளை செய்வது வழக்கம். அதேபோல் இன்று தோட்டத்திற்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மெயின் ரோட்டிலிருந்து திருவள்ளுவர் மேலத்தெருவிற்கு திரும்பும்போது, நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News