நெல், கரும்புக்கான ஆதார விலையை அரசு உடனடியாக அறிவிக்கணும்...!

நெல், கரும்புக்கான ஆதார விலையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-01-10 11:52 GMT

நெல், கரும்புக்கான ஆதார விலையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி வலியுறுத்தியுள்ளார். 

கரும்பு மற்றும் நெல்லிற்குண்டான ஆதார விலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.! 

இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. அனைத்து தரப்பு மக்களும் அறுவடை திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு ரூ. 1000/- கொடுத்தாலும், தமிழக விவசாயிகள் தற்போது அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் கரும்பு மற்றும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல்லிற்குண்டான ஆதார விலையை தமிழக அரசு அறிவிக்காமல் இருக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருக்கும் விவசாயிகளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கிறது. இதனால் மனமுடைந்துள்ள விவசாயிகள் இந்தாண்டின் அறுவடை திருநாளான பொங்கல் திருநாளை, மிகுந்த மன வேதனையுடன் கருப்பு பொங்கலாக அனுசரிப்பர் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News