அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 04:47 GMT
மாணவர் சேர்க்கை திருவிழா
தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தசாமிபுரம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை திருவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார், தலைமை ஆசிரியர் பரிமளா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.