புதிய பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு!
திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 15:36 GMT
அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ,கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் இன்று (08.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.