கரூரில் நவீன வசதிகளுடன் அரசு பள்ளி - நூறு சதவீதம் தேர்ச்சி

கரூரில் ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி நவீன வசதிகளுடன் இருக்கும் அரசு பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

Update: 2024-05-10 11:38 GMT
கரூரில் ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி நவீன வசதிகளுடன் அரசு பள்ளி - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குமரன் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை 165 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.தலைமை ஆசிரியர் உட்பட 15 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மூன்று மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதிய நிலையில், 24 பேருமே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று இந்த அரசு பள்ளி சாதனை படைத்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் எளிதாக கல்வி பயிலவும், ஆர்வத்துடன் வகுப்பறையில் பங்கேற்பதற்காக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் குளிர்சாதன வசதி, நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ள இந்த பள்ளியில், மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அழைப்பு விடுத்துள்ளார் பள்ளியின் தலைமை ஆசிரியை சிவகாமி.
Tags:    

Similar News