குடியரசு தினமானத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தினமானத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

Update: 2024-01-18 15:10 GMT


விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தினமானத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.


விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான வரும் 26 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும் எனவும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும்,அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் குறித்தும், தூய்மைபாரத இயக்கம் சுகாதாரம் குறித்தும் ஜல் ஜீவன் இயக்கம் குறித்தும், இதரபொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும். எனவே, வரும் 26 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டு மென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.
Tags:    

Similar News