ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்- கோரிக்கைகளை முன்வைத்த பொதுமக்கள்

அரியலூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-27 08:51 GMT

கிராமசபை கூட்டம்

அரியலூர் மாவட்டம் ,எருத்துகாரன்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் சிவா தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், ஊராட்சியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிபணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் அரசின் சார்பிலான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதனையடுத்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். இதேபோல் ஓட்டக்கோவில், வாலாஜாநகரம், உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News