தர்மபுரியில் பெரிய புராணம் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி

தர்மபுரி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைப்பெற்ற பக்தி சொற்பொழிவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-14 07:33 GMT

சொற்பொழிவு

தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெரிய புராணம் தொடர் வகுப்பு துவங்குவதை முன்னிட்டு பக்தி சொற்பொழிவு நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சிவனடியார் தியாகராஜர் கலந்து கொண்டு பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் குறித்து பக்தி சொற்பொழிவு ஆற்றினார். இதையடுத்து பெரியபுராணம் தொடர் வகுப்பு துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெரியபுராணம் சொற்பொழிவை கேட்டு ரசித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சுகுமார் நிர்வாகிகள் அசோக்குமார் கார்த்திகேயன் ஜெயலட்சுமி செந்தில் வேலன் சிவசண்முகம் மாது மற்றும் கோவில் அர்ச்சகர் எழிலரசு லில்லி தமிழ் ஆசிரியர் ஆகியோர் செய்திருந்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News