அரசுப் பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாட்டம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-10 11:10 GMT
அரசுப் பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது.. இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் பசுமை தீபாவளியை கொண்டாடும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாணவர்களுக்கு பசுமை தீபாவளி! புகையில்லா தீபாவளி! தூய்மை தீபாவளி இவற்றின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது... நிகழ்வின் போது பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....