கன்னியாகுமரி: மக்கள் குறைத்தீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-26 14:07 GMT
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (26.02.2024) நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,  சாலை வசதி  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 368 கோரிக்கை  மனுக்கள்  இன்று  பெறப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பிற்படுத்தபட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுப்பையா, டாஸ்மார்க் பொதுமேலாளர் சங்கரலிங்கம், அனைத்துதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News