காங்கேயத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் காங்கேயத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2024-07-03 02:31 GMT

பைல் படம் 

காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று   காங்கேயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. மின் பயனீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News